எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிப்பதற்காகவே அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாகவும் இதற்காகவே முன்னுரிமை கொடுத்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதனைக் காலந்தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாதெனத் தெரிவித்தார்.