இலங்கையில் புலிகளுக்கு ஆதரவான ஏழு தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதுடன், அவர்களில் 388 பேர் இலங்கைக்கு திரும்புவதை தடை செய்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன வெளியிட்டார்.
பிரிட்டிஷ் தமிழ் மன்றம், கனடிய தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகளாவிய தமிழ் மன்றம் மற்றும் கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உட்பட ஏழு வெளிநாட்டு அமைப்புகளும் 388 செயற்பாட்டாளர்களும் இதில் அடங்கும்.
பயங்கரவாதத்தை புதுப்பிப்பதற்கான புலிகளின் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் அப்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்திருந்தாலும் 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அமைப்புகளின் பெயர்களையும் அவற்றின் கூட்டாளிகளையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது.
இதன் விளைவாகஇ வெளிநாட்டிலிருந்து விடுதலைப் புலிகளை புதுப்பிக்க முயன்ற எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் ஏராளமானோர் சமீப காலங்களில் இலங்கைக்கு வந்து வெளிநாடுகளுக்குத் திரும்பி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.